மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லக்கிம்பூர் கலவரம்: விளக்குடன் இளைஞர் காங். பேரணி

லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் டார்ச் விளக்குகளை ஏந்தியவாறு தில்லியில் பேரணி நடத்தினர்.

News image

லக்கிம்பூர் கலவரம்: விளக்குடன் இளைஞர் காங். பேரணி

Updated On :13 அக்டோபர் 2021, 2:34 pm

லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் டார்ச் விளக்குகளை ஏந்தியவாறு தில்லியில் பேரணி நடத்தினர்.

இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.

மேலும் இந்தச் சம்பவத்தால் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆத்திரத்தில் தாக்கியதில் காா் டிரைவா் உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

பல்வேறு மாநிலங்களில் ஆளுநா் மாளிகை அருகிலும், யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்கு எதிரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தவகையில் தில்லியில் இளைஞர் காங்கிரஸார் கைகளில் டார்ச் விளக்குடன் பேரணியில் ஈடுபட்டனர்.  இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.