வெள்ள பாதிப்பு நிவாரணம்: விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் முதல் அக்டோபர் வரையிலான தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிரத்தில் 55 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 

இந்நிலையில், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் நஷ்டமடைந்த விவசாயிகள் நிவாரணத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அதன்படி பாசன வசதியற்ற நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பாசன வசதியுடைய நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை சார்ந்த நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com