
மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மணிப்பூரின் கங்க்போக்பியில் உள்ள கம்னான் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று(அக்-12) நடைபெற்றது.
இதையும் படிக்க | பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி
இதில் அப்பகுதி மக்கள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அக்கூட்டதில் புகுந்த குகி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களில் 3 பேரின் உடலை மீட்டிருப்பதாகவும் 2 பேரின் உடலைத் தேடி வருவதாகவும் இத்தாக்குதலில் ஈடுபட்ட குகி பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக மணிப்பூரின் ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த அக்-10 ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.