ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

தில்லயில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. 

News image
சோனியா காந்தி(கோப்புப்படம்)
Updated On :16 அக்டோபர் 2021, 5:38 am

DIN

தில்லயில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. 

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.தமிழகம் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மேலும் வரவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா பரவிய பின் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலியில் இல்லாமல் முதல்முறையாக நேரடியாக கூடியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததால் 2019ஆகஸ்ட் மாதம் தற்காலிக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.