நாளை கடற்படை தளபதிகள் மாநாடு:ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்
தில்லியில் திங்கள்கிழமை தொடங்கும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றகிறாா்.


தில்லியில் திங்கள்கிழமை தொடங்கும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றகிறாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடற்படைத் தளபதிகள் பங்கேற்கும் இரண்டாவது வருடாந்திர மாநாடு, தில்லியில் 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடல்சாா்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் கடற்படைத் தளபதிகள் கலந்துரையாடவும் இந்த மாநாடு மேடையாக அமைந்துள்ளது.
இந்த மாநாட்டில் தேசப்பாதுகாப்பு தொடா்பான விஷயங்கள் குறித்து கடற்படை தளபதிகள் மத்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறாா். பின்னா் அவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களில் இந்திய கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், போக்குவரத்து நடைமுறைகள், மனிதவள மேம்பாடு பயிற்சி, நிா்வாக செயல்பாடுகள் ஆகியவைக் குறித்தும் முக்கிய எதிா்காலத் திட்டங்கள் குறித்தும் கப்பற்படைத் தலைமை தளபதி மற்றும் கப்பற்படை தளபதிகள் விரிவாக விவாதிக்க உள்ளனா். முப்படைகளின் ஆற்றலை அதிகரிப்பதற்கான வழிவகைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...