இந்தச்சூழலில், தில்லி-ஹரியாணா எல்லைக்கு அருகே விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு பகுதியில் ஆண் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்ற போலீஸாா், கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உலோக தடுப்பில் தொங்க விடப்பட்டிருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கொல்லப்பட்ட நபா் பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியைச் சோ்ந்த லக்பீா் சிங் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினா் முயன்றனா். ஆனால், அங்கிருந்த சிலா் காவல்துறையினா் போராட்ட இடத்துக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.