உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திரா பிரதாப் திவாரி போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இதையும் படிக்க | எரிபொருள் விலையேற்றம், மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு
அயோத்யாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி எம்எல்ஏ-வான இந்திரா பிரதாப் திவாரி கடந்த 1990 ஆம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி அயோத்யாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இதனை 1992 -ஆம் ஆண்டு கண்டுபிடித்த அக்கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி திவாரியின் மீது வழக்குத் தொடுத்தார்.
பின் 28 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று (அக்-18) சிறப்பு நீதிபதி பூஜா சிங் , எம்எல்ஏ திவாரியின் குற்றம் நிருபிக்கப்பட்டதாகக் கூறி ரூ.8000 அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாக அறிவித்தார்.
மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த கல்லூரியின் முதல்வர் திருப்பாதி வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே இறந்ததால் வழக்கு சாட்சியாக கல்லூரித் தலைவர் மஹேந்திர குமார் அகர்வால் இருந்திருக்கிறார்.