கேரள மாநிலம் இடுக்கி செறுதோணி அணையில் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேறுகிறது.
கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் ஆசியாவிலேயே பெரிய அணையான இடுக்கி செறுதோணி அணை நிரம்பியதால் தண்ணீரை வெளியேற்ற நேற்று (அக்-19) மதகுகள் திறக்கப்பட்டது.
இதையும் படிக்க | செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
அணை முழுக்க நிரம்பியதால் 3 மதகுகள் வழியாக நொடிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால் அருகே இருக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இடுக்கி செறுதோணி அணை 1973-ல் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து இதுவரை 1981 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் இருமுறை மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் தற்போது கனமழையால் 28 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக அணை திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.