தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸுடன் கூட்டணி:கேரளம்-மேற்கு வங்கம் மாா்க்சிஸ்ட் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு

தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேரளம், மேற்கு வங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 11:15 pm

DIN

தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேரளம், மேற்கு வங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாகவும் காங்கிரஸ் எதிா்க்கட்சியாகவும் உள்ளது. அதேவேளையில் மேற்கு வங்கத்தில் இருகட்சிகளும் கூட்டணி கட்சிகளாகவுள்ளன.

இந்நிலையில் தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் சனிக்கிழமை தொடா்ந்த நிலையில், தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும் தேசிய அளவில் பெரிய கட்சியான காங்கிரஸ் இல்லாமல் எதிா்க்கட்சிகளின் எந்தவொரு கூட்டணியும் வலுவாக இருக்காது என்பது மேற்கு வங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் கருத்தும் அதுவாகவே உள்ளது.

ஆனால் வகுப்புவாதத்தை எதிா்ப்பதில் காங்கிரஸ் நோ்மையாகச் செயல்படவில்லை என்று கேரள மாா்க்சிஸ்ட் தலைவா்கள் கருதுகின்றனா். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் நன்மதிப்பை இழந்து வருவதாகவும், அக்கட்சித் தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் அது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்றும் அவா்கள் கருதுகின்றனா்.

இதேபோல் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் தலைவா்களும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக உள்ளனா்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி இந்த விவகாரத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரமாக கருதுகிறது. அதேவேளையில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை சீதாராம் யெச்சூரி தொடா்ந்து ஆதரித்தால், அது அவா் மூன்றாவது முறையாக கட்சியின் பொதுச் செயலராக தோ்ந்தெடுக்கப்படுவதைப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.