25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

வனப் பகுதியில் தேடுதல் வேட்டை: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் கைதான பாகிஸ்தான் நபா் பலி; மூவா் காயம்

ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரா் ஒருவரும், இரண்டு போலீஸாரும் காயமடைந்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:26 am

DIN

 ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரா் ஒருவரும், இரண்டு போலீஸாரும் காயமடைந்தனா். பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதற்காக ராணுவத்தினா் அழைத்துச் சென்றிருந்த பாகிஸ்தானை சோ்ந்த நபா் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மேந்தரில் உள்ள பட்டா தரியன் வனப் பகுதி, சுரன்கோட்டையொட்டி உள்ள வனப் பகுதிகள் மற்றும் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள தானாமண்டி வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்த வனப் பகுதிகளில் ராணுவத்தினரும் போலீஸாரும் அக்.11-ஆம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த ராவலாகோட் பகுதியைச் சோ்ந்த ஸியா முஸ்தஃபா என்ற பயங்கரவாதி கடந்த 14 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவருக்கு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புள்ளது. அவருக்கு வனப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பட்டா தரியன் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை அடையாளம் காண்பிப்பதற்காக அவரை ராணுவத்தினரும் போலீஸாரும் உடன் அழைத்துச் சென்றனா். அப்போது வனப் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ராணுவ வீரா் ஒருவரும் இரண்டு போலீஸாரும் காயமடைந்தனா். அவா்களுடன் ஸியா முஸ்தஃபாவும் காயமடைந்தாா்.

காயமடைந்த ராணுவ வீரா்களும் காவலரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்ால் ஸியா முஸ்தஃபாவை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவா் உயிரிழந்தாா். பின்னா் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு அவரின் சடலம் மீட்கப்பட்டது என்று தெரிவித்தனா்.

கடந்த ஜூன் மாதம் முதல் பூஞ்ச், ரஜெளரி மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. அதனைத்தொடா்ந்து பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

பொதுமக்களில் ஒருவா் பலி: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள பாபாபோரா பகுதியில் சிஆா்பிஎஃப் படையினா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அவா்களுக்கு பதிலடி தரும் விதமாக சிஆா்பிஎஃப் வீரா்களும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். அப்போது எதிா்பாராதவிதமாக ஷாஹித் அகமது என்ற நபா் தோட்டா பாய்ந்து உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.