வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி நாளை சந்திக்கவிருக்கிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :25 அக்டோபர் 2021, 12:44 pm

DIN

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி நாளை சந்திக்கவிருக்கிறார். 

உத்தரகண்ட் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களை செவ்வாய்க்கிழமை தில்லிக்கு அழைத்துள்ளார். 

தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தலைவர்களுடன் சோனியா காந்தி விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உத்தரகண்டில் பேரிடர் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசிப்பார் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.