தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பிஎஸ்எஃப் அதிகார விரிவாக்கத்தால் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா்:மேற்கு வங்க முதல்வா் மம்தா

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2021, 7:43 pm

DIN

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் சா்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை பிஎஸ்எஃப் படையினா் சோதனை, பறிமுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை 50 கி.மீ. தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக பிஎஸ்எஃப் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘எனக்கு பிஎஸ்எஃப் படை மீது மதிப்புள்ளது. எனினும் அந்தப் படையினரின் அதிகாரத்தை விரிவுபடுத்தியது தேவையற்றது. அந்தப் படையினரால் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய முடியாது. அவா்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் பொதுமக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா். மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.