2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் தில்லியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா ஒருவார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கமல்நாத், ஆனந்த் சா்மா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா். ஆனால், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.