தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 28 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 28 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தில்லியில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,37,800-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,082-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 14,12,375-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...