மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேரளம் : போலி துப்பாக்கி உரிமம் தயாரித்த 5 பேர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர்  கைது செய்திருக்கிறார்கள்.

News image

கேரளம் : காஷ்மீரைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கைது

Updated On :2 செப்டம்பர் 2021, 6:47 am

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர்  கைது செய்திருக்கிறார்கள்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடந்த ஆறு மாதமாக திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையை செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று (செப்-1)  காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி அவர்களை பரிசோதனை செய்தபோது போலி துப்பாக்கி உரிமம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று (செப் 2) அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்கள்.

மேலும் கைதானவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கைதானவர்கள் -சவுகத் அலி , சுகுர் அகமது , குல்சமன், முஸ்தாக் உசைன் மற்றும் முகமது ஜாவித்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.