கேரளம் : போலி துப்பாக்கி உரிமம் தயாரித்த 5 பேர் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடந்த ஆறு மாதமாக திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையை செய்து வந்தனர்.
இதையும் படிக்க | நியூ யார்க்கைப் புரட்டிப் போடும் 'இடா' புயல்: விமான சேவைகள் ரத்து
இந்நிலையில் நேற்று (செப்-1) காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி அவர்களை பரிசோதனை செய்தபோது போலி துப்பாக்கி உரிமம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (செப் 2) அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்கள்.
மேலும் கைதானவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கைதானவர்கள் -சவுகத் அலி , சுகுர் அகமது , குல்சமன், முஸ்தாக் உசைன் மற்றும் முகமது ஜாவித்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...