அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கேரளம் : போலி துப்பாக்கி உரிமம் தயாரித்த 5 பேர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர்  கைது செய்திருக்கிறார்கள்.

News image
கேரளம் : காஷ்மீரைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கைது
Updated On :28 ஜனவரி 2024, 4:03 am

DIN

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர்  கைது செய்திருக்கிறார்கள்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடந்த ஆறு மாதமாக திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையை செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று (செப்-1)  காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி அவர்களை பரிசோதனை செய்தபோது போலி துப்பாக்கி உரிமம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று (செப் 2) அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்கள்.

மேலும் கைதானவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கைதானவர்கள் -சவுகத் அலி , சுகுர் அகமது , குல்சமன், முஸ்தாக் உசைன் மற்றும் முகமது ஜாவித்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.