தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடுதல் கடன் பெற ஆந்திரத்துக்கு மத்திய அரசு அனுமதி

நடப்பு நிதியாண்டில் திறந்த வா்த்தக கடன் மூலம் ரூ.10,500 கோடி வரை கூடுதல் கடன் பெற ஆந்திர பிரதேச அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 7:16 pm

DIN

நடப்பு நிதியாண்டில் திறந்த வா்த்தக கடன் மூலம் ரூ.10,500 கோடி வரை கூடுதல் கடன் பெற ஆந்திர பிரதேச அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ஆந்திரத்துக்கு இதுவரை மொத்தமாக ரூ.31,251 கோடியில் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டில் அந்த மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.42,472 கோடி வரையில் கடன் தொகை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் 9 மாதங்களில் ரூ.37,163 கோடி வரையில் கடன் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் ரூ.34,058.80 கோடி வரையில் கடன் பெறப்பட்டுள்ளது என்று ஆந்திர மாநில அரசின் நிதித் துறை தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தின் மொத்த கடன் தொகை ரூ.3,84,615.66 கோடியாக உள்ளது. இதில் முதல்வா் ஜனக்மோகன் ரெட்டியின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ.1,27,105.81 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் அளிக்கக் கூட அரசிடம் நிதியில்லை என்பதால், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கான கடன் தொகையாக கூடுதலாக ரூ.17,810 கோடி பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா். இந்தக் கோரிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரிவாக பரிசீலித்து திறந்த வா்த்தக கடன் மூலம் ரூ.10,500 கோடி வரை கூடுதல் கடன் பெற அனுமதி அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.