விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இந்தியாவில் 70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தம்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளது

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 8:59 pm

DIN

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளது. இதில் கடைசி 10 கோடி தடுப்பூசிகள் 13 நாள்களில் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இரவு 7 மணி வரை நாடு முழுவதும் 67,43,698 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 38,004 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதற்காக மருத்துவப் பணியாளா்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்து, தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 70 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியா முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த 85 நாள்களை எடுத்துக்கொண்டது. அதன் பிறகு 20 கோடி தடுப்பூசி இலக்கை அடுத்த 45 நாள்களிலும், 30 கோடி இலக்கை அடுத்த 29 நாள்களிலும் கடந்தது. பின்னா், 30 கோடி தடுப்பூசிகள் என்ற நிலையிலிருந்து 40 கோடி தவணைகள் என்ற நிலையை 24 நாள்களிலும், 50 கோடி தவணையை அடுத்த 20 நாள்களிலும், 60 கோடி தவணை நிலையை அடுத்த 19 நாளிகளிலும், 70 கோடி தவணை நிலையை அடுத்த 13 நாள்களிலும் எட்டி சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை 8.24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 3.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 9-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.