தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உ.பி. சிறுமி கடத்தல் வழக்கை தில்லி காவல்துறைக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

13 வயது சிறுமி காணாமல் போனதாக உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தில்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
உ.பி. சிறுமி கடத்தல் வழக்கை தில்லி காவல்துறைக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்
Updated On :7 செப்டம்பர் 2021, 8:10 am

DIN


13 வயது சிறுமி காணாமல் போனதாக உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தில்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை 8ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரில் 13 வயது சிறுமி காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்தச் சிறுமி தில்லி காவல்துறையினரால் மீட்கப்பட்டு, கடத்திய நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர், வழக்கு விசாரணையை தில்லி காவல்துறைக்கு மாற்றி, இது குறித்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் திரட்டிய அனைத்து ஆதாரங்களையும் தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.