மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

எதிர்நீச்சல் போன்று ஒளிபரப்பாகும் மல்லி தொடர்!

வாரத்தின் அனைத்து நாள்களிலும் மல்லி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து...

Sun Tvs Malli serial

மல்லி தொடர் - இன்ஸ்டாகிராம்

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மல்லி தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது. எதிர்நீச்சல் தொடரைப் போன்று ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப மல்லி தொடரும் வார இறுதி நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மல்லி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மல்லி தொடரின் விஜய் வெங்கடேசன், நிகிதா ராகேஷ், ரஹிலா சயீத் உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி கிரேஸி தங்கவேல், தனுஸ்ரீ, நிஷா கபூர் உள்ளிட்டோரின் நடிப்பும் பக்க பலமாக அமைந்து வருகிறது.

மல்லி தொடரில்...

மல்லி தொடரில்... - இன்ஸ்டாகிராம்

2024 ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் 650 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மல்லி தொடர், தற்போது வார இறுதி நாள்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

நாள்தோறும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து மல்லி தொடரும் ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

Sun Tvs Malli serial telecast every days in a week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.