உலக சாம்பியன் செல்ஸியை 2-8 என வீழ்த்திய பிஎஸ்ஜி..! பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள்!
சாம்பியன்ஸ் லீக்கில் செல்ஸி அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி அணி குறித்து...


சாம்பியன்ஸ் லீக்கில் செல்ஸி அணியை 2-8 என நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இரண்டாம் கட்ட ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் செல்ஸி - பிஎஸ்ஜி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 0-3 என பிஎஸ்ஜி வென்றது. முதல் கட்ட ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 2-5 என பிஎஸ்ஜி வென்றிருந்தது.
செல்ஸி அணி கடந்தாண்டு நடைபெற்ற கிளப் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. செல்ஸி அணியினர் மிகுந்த பெருமையுடன் ”உலகின் சாம்பியன்” என போஸ்டர் அடித்து வந்தனர்.

செல்ஸி அணியினரின் பதாகை.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் 6, 14, 62ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினர். செல்ஸி அணியின் ரசிகர்கள் பாதி வழியிலேயே திடலை விட்டு வெளியேறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
செல்ஸி அணியின் பயிற்சியாளர், “சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு நல்ல அணியிடம் நீங்கள் தவறு செய்தால் இப்படித்தான் ஆகும். முதல் கோல் எங்களின் தவறு. பல கோல்களை விடுவதற்கு வாய்ப்புகளே இல்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...