திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருடப்பட்ட வெற்றி..! நடுவர்களை விமர்சித்த பார்சிலோனா வீரர்!

சாம்பியன்ஸ் லீக்கில் நடுவர்களின் மோசமான செயல்பாடுகள் குறித்து...

News image

ரஃபீனியா. - படம்: எஃப்சி பார்சிலோனா.

Updated On :15 ஏப்ரல் 2026, 5:06 pm IST

சாம்பியன்ஸ் லீக்கில் நடுவர்களின் மோசமான தீர்ப்புகளினால் பார்சிலோனா அணி தோல்வியுற்றதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல பார்சிலோனா அணிக்கு தர வேண்டிய எந்த நியாயமான முடிவுகளையும் அளிக்க முடியவில்லை எனப் பலரும் குற்றம் சுமத்தினார்கள்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரஃபீனியா அத்லெடிகோ ரசிகர்களை நோக்கி, “நீங்கள் அடுத்த போட்டியில் வெளியே செல்வீர்கள்” என சைகை மொழியில் கூறுவார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை இது திருடப்பட்டது. இந்தப் போட்டி மட்டுமல்ல; முதல்கட்ட போட்டியும் அப்படித்தான். நடுவர்கள் மோசமாக செயல்படுகிறார்கள். அத்லெடிகோ மாட்ரிட் பல ஃபொல்களை செய்தும் அவர்களுக்கு எல்லோ கார்டு (மஞ்சள் அட்டை) காண்பிக்காதது ஆச்சரியமளிக்கிறது.

பார்சிலோனா வெற்றி பெறுவது அவர்களுக்குப் பயத்தைக் கொடுக்கிறது என்றார். முதல்கட்ட காலிறுதியில் 1 ரெட் கார்டு, இரண்டாம் கட்ட காலிறுதியிலும் 1 ரெட் கார்டு பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Raphinha criticizes referees after Barcelona's CL elimination, says club was ''robbed''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.