ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

திருடப்பட்ட வெற்றி..! நடுவர்களை விமர்சித்த பார்சிலோனா வீரர்!

சாம்பியன்ஸ் லீக்கில் நடுவர்களின் மோசமான செயல்பாடுகள் குறித்து...

Raphinha

ரஃபீனியா. - படம்: எஃப்சி பார்சிலோனா.

Published On :

சாம்பியன்ஸ் லீக்கில் நடுவர்களின் மோசமான தீர்ப்புகளினால் பார்சிலோனா அணி தோல்வியுற்றதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என கோல் அடித்தும், ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2-3 என அத்லெடிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் எரிக் கார்சியவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல பார்சிலோனா அணிக்கு தர வேண்டிய எந்த நியாயமான முடிவுகளையும் அளிக்க முடியவில்லை எனப் பலரும் குற்றம் சுமத்தினார்கள்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரஃபீனியா அத்லெடிகோ ரசிகர்களை நோக்கி, “நீங்கள் அடுத்த போட்டியில் வெளியே செல்வீர்கள்” என சைகை மொழியில் கூறுவார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை இது திருடப்பட்டது. இந்தப் போட்டி மட்டுமல்ல; முதல்கட்ட போட்டியும் அப்படித்தான். நடுவர்கள் மோசமாக செயல்படுகிறார்கள். அத்லெடிகோ மாட்ரிட் பல ஃபொல்களை செய்தும் அவர்களுக்கு எல்லோ கார்டு (மஞ்சள் அட்டை) காண்பிக்காதது ஆச்சரியமளிக்கிறது.

பார்சிலோனா வெற்றி பெறுவது அவர்களுக்குப் பயத்தைக் கொடுக்கிறது என்றார். முதல்கட்ட காலிறுதியில் 1 ரெட் கார்டு, இரண்டாம் கட்ட காலிறுதியிலும் 1 ரெட் கார்டு பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Raphinha criticizes referees after Barcelona's CL elimination, says club was ''robbed''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.