ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த 'ஜக் லாட்கி' கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த சரக்கானது கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து ஏற்றப்பட்டது.
இந்தக் கப்பல், ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்தபோது எண்ணெய் முனையம் தாக்கப்பட்டாலும், கப்பலுக்கும் அதில் இருந்த இந்திய ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதியானது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 28 இந்திய சரக்கு கப்பல்களும் அப்பகுதியில் சிக்கின.
இந்த நிலையில், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மோசமான சூழலை எட்டியது. இதனையடுத்து, மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒவ்வொரு கப்பலாக இந்தியா வந்தடைந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய இரண்டு கப்பல்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக, ஜக் லாட்கி கப்பல் குஜராத் வந்தடைந்துள்ளது.
மேலும், இதன்மூலம் இந்தியாவில் நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The Indian-flagged ship 'Jak Ladki' carrying approximately 80,886 metric tons of crude oil has successfully arrived at the Indian port of Mundra in Gujarat today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மட்டுமல்ல ஒரு தேர்வையும் விட்டு வைக்காத குஜராத் கும்பல்!

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்தது: ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,340 டன் உரமூட்டைகள்
குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP




