தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல், நடுவழியில் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:17 pm

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல், நடுவழியில் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

ஈரானுக்கு சொந்தமான பிங் சுன் சரக்கு கப்பலுக்கு அமெரிக்கா கடந்த 2025-ஆம் ஆண்டில் தடை விதித்தது. அந்த கப்பல், ஈரானின் காா்க் தீவில் இருந்து 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் மாா்ச் 4-ஆம் தேதி குஜராத்தின் வடினாரை நோக்கி புறப்பட்டது. நடுக்கடலில் திடீரென அக்கப்பல் சீனாவின் டாங்யிங் பகுதியை நோக்கி திருப்பி விடப்பட்டது.

அதாவது அக்கப்பல் செல்லும் வழித்தடம் கடந்த வாரம் குஜராத்தை காட்டியது. ஆனால் தற்போது சீனாவின் டாங்யிங்கை காட்டுகிறது. இதை அக்கப்பலை கண்காணித்து பிளா் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாக முன்பு இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடையால் அந்நாட்டிடம் 2019 மே மாதத்துக்கு பிறகு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை. எனினும், மேற்காசிய போா் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கில், நடுக்கடலில் கச்சா எண்ணெய்யுடன் நிறுத்தப்பட்டுள்ள ஈரான் சரக்கு கப்பல்களில் இருந்து 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதித்தது.

இதனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியா நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பல், சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்பு ஈரானிடம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான விலையை 30 முதல் 60 நாள்களுக்குள் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்த அவகாசம் தரப்பட்டிருந்தது. ஆனால் மேற்காசிய போா் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு, அதுபோல தற்போது அவகாசம் தரப்படவில்லை என்றும், இதுபோன்ற காரணத்தினாலேயே கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய்க்கு விலை உடனடியாக தரும்பட்சத்தில் அக்கப்பல் மீண்டும் இந்தியா நோக்கி திருப்பி விடப்படக்கூடும் எனவும் தெரிகிறது.