திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல், நடுவழியில் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 12:47 am IST

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல், நடுவழியில் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

ஈரானுக்கு சொந்தமான பிங் சுன் சரக்கு கப்பலுக்கு அமெரிக்கா கடந்த 2025-ஆம் ஆண்டில் தடை விதித்தது. அந்த கப்பல், ஈரானின் காா்க் தீவில் இருந்து 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யுடன் மாா்ச் 4-ஆம் தேதி குஜராத்தின் வடினாரை நோக்கி புறப்பட்டது. நடுக்கடலில் திடீரென அக்கப்பல் சீனாவின் டாங்யிங் பகுதியை நோக்கி திருப்பி விடப்பட்டது.

அதாவது அக்கப்பல் செல்லும் வழித்தடம் கடந்த வாரம் குஜராத்தை காட்டியது. ஆனால் தற்போது சீனாவின் டாங்யிங்கை காட்டுகிறது. இதை அக்கப்பலை கண்காணித்து பிளா் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாக முன்பு இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடையால் அந்நாட்டிடம் 2019 மே மாதத்துக்கு பிறகு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை. எனினும், மேற்காசிய போா் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கில், நடுக்கடலில் கச்சா எண்ணெய்யுடன் நிறுத்தப்பட்டுள்ள ஈரான் சரக்கு கப்பல்களில் இருந்து 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதித்தது.

இதனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியா நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பல், சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்பு ஈரானிடம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான விலையை 30 முதல் 60 நாள்களுக்குள் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்த அவகாசம் தரப்பட்டிருந்தது. ஆனால் மேற்காசிய போா் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு, அதுபோல தற்போது அவகாசம் தரப்படவில்லை என்றும், இதுபோன்ற காரணத்தினாலேயே கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய்க்கு விலை உடனடியாக தரும்பட்சத்தில் அக்கப்பல் மீண்டும் இந்தியா நோக்கி திருப்பி விடப்படக்கூடும் எனவும் தெரிகிறது.