குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆந்திரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தீ விபத்து: 10 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :10 செப்டம்பர் 2021, 11:14 am

DIN

ஆந்திர மாநிலம் கடப்பாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

ஆந்திர மாநிலம் கடப்பாவில் விநாயகர் சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெனகலூரில் இருந்து சந்துப்பள்ளி கிராமத்திற்கு இளைஞர்கள் எடுத்துச் சென்றபோது பட்டாசு வெடித்துள்ளனர். 

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். 'நேற்று இரவு 10.30 மணியளவில், வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தற்செயலாக தீப்பிடித்தது. இதில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் கடப்பா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது' என்று பெங்களுரு காவல் நிலைய துணை ஆய்வாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.