விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப் பிரதேசம், கோவா தேர்தல்களில் களமிறங்கும் சிவசேனை

உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 தொகுதிகளிலும் கோவாவில் 20 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக சிவசேனை கட்சி அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 செப்டம்பர் 2021, 9:28 am

DIN

அடுத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், கோவா சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 தொகுதிகளிலும் கோவாவில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளோம். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. கோவாவில் மகா விகாஸ் அகாதி போன்ற கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எங்களுக்கு தொண்டர்கள் உள்ளனர். எனவே, வெற்றியோ தோல்வியோ போட்டியிடவுள்ளோம்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, முதல்வர் பொறுப்பு தராததால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனை முறித்து கொண்டது. பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.