அடுத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், கோவா சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 தொகுதிகளிலும் கோவாவில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளோம். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. கோவாவில் மகா விகாஸ் அகாதி போன்ற கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எங்களுக்கு தொண்டர்கள் உள்ளனர். எனவே, வெற்றியோ தோல்வியோ போட்டியிடவுள்ளோம்" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, முதல்வர் பொறுப்பு தராததால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனை முறித்து கொண்டது. பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


