விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆந்திரத்தில் 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

News image

ஆந்திரத்தில் 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

Updated On :14 செப்டம்பர் 2021, 10:57 am

நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான ஆந்திரத்தில் கடந்த செப்-11 முதல் 13 வரையில் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களால் தான் இத்தனை பெரிய சாதனை நிகழ்ந்திருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் முகாம் நடந்த மூன்று நாட்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18-44 வயது உடையவர்கள் மட்டும் 28.36 லட்சம் என்றும் மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியைக் கடந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 75.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.