ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காட்டில் கால்பந்து விளையாடிய கரடிகள்

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இரு கரடிகள் கால்பந்து விளையாடும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

News image
காட்டில் கால்பந்து விளையாடிய கரடிகள்
Updated On :14 செப்டம்பர் 2021, 9:41 am

DIN

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இரு கரடிகள் கால்பந்து விளையாடும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உமர்கோட் பகுதியிலுள்ள வனப்பகுதி அருகே சிறுவர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர்.

அப்போது பந்து காட்டிற்கு அருகில் சென்று விழுந்த நிலையில், அந்த இடத்திற்கு வந்த இரண்டு கரடிகள் சிறுவர்களைப் போன்று பந்தை உதைத்து விளையாட ஆரம்பித்தன.

கால்பந்தை முதல் முறை கண்ட கரடிகள் பந்தைக் கண்டு முதலில் அஞ்சிய நிலையில், பின்னர் பந்தை உதைத்து உதைத்து விளையாடத் தொடங்கின.

இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த விடியோக் காட்சிகளை ஒடிசா வனத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.