காஷ்மீர் : குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம்
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று(செப்-14) காவலர்களை தாக்குவதற்காக வீசப்பட்ட வெடிகுண்டில் சிக்கி பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று(செப்-14) காவலர்களை தாக்குவதற்காக வீசப்பட்ட வெடிகுண்டில் சிக்கி பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளைக் வீசினர். ஆனால் குண்டு குறிதவறி சாலையில் விழுந்தது.இதில் எதிர்பாராத விதமாக அங்கே நின்று கொண்டிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பின் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...