புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிகார்: சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வந்தது எப்படி?

பிகார் மாநிலத்தில் பள்ளிச் சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டதாகக் கிடைத்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்த்துள்ளனர்.

News image
பிகார்: சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வந்தது எப்படி?
Updated On :16 செப்டம்பர் 2021, 12:15 pm

DIN


பிகார் மாநிலத்தில் பள்ளிச் சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டதாகக் கிடைத்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்த்துள்ளனர்.

பிகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில், பகௌரா பஞ்சாத்துக்குள்பட்ட பஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த குருசந்திர விஷ்வாஸ் மற்றும் அஸித் குமார் என்ற பள்ளிச் சிறார்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான பணம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

தங்களது பள்ளிச் சீருடைக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்று சோதிக்க வங்கிக்குச் சென்ற போதுதான் இந்த ஆனந்த அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது.

விஷ்வாஸ் கணக்கில் ரூ.60 கோடியும், குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடியும் வரவு வைக்கப்பட்டிருந்தததாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து வங்கி மேலாளர் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவ்வாறு வங்கிக் கணக்கில் பணமிருப்பதாகக் காட்டியிருக்கலாம். உண்மையில் அவர்களது வங்கிக் கணக்கில் எந்த பணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பாட்னாவில், இதுபோல வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.5.5 லட்சத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த நபர் சிறையில் அடைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.