இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள்:80 கோடியை கடந்தது
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.33 கோடியை எட்டியுள்ளது. 60,03,94,452 போ் தடுப்பூசியின் முதல் தவணையையும், 20,29,80,695 போ் தடுப்பூசியின் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனா். கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததற்கு மருத்துவப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தாா்.
சனிக்கிழமை மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கோவின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...