எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள்:80 கோடியை கடந்தது

 நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 12:44 am

DIN

 நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.33 கோடியை எட்டியுள்ளது. 60,03,94,452 போ் தடுப்பூசியின் முதல் தவணையையும், 20,29,80,695 போ் தடுப்பூசியின் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனா். கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததற்கு மருத்துவப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தாா்.

சனிக்கிழமை மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கோவின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.