வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஹிமாசல்: அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி

ஹிமாசலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.

News image
Updated On :20 செப்டம்பர் 2021, 4:23 pm

DIN

ஹிமாசலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.

698 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள ஹிமாசல்கில் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. பாஜகவின் ஜெய் ராம் தாக்குர் முதல்வராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிற்பாதியில் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடையவுள்ளதால், நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், தில்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஹிமாசல் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 

ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே ஆம் ஆத்மியும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தலுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.