தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

போதைப் பொருள்கள் ஒழிப்பு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற  இளைஞா்  காங்கிரஸ்  கட்சியினா்.

Updated On :13 மார்ச் 2026, 1:10 am

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.

போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து பேரணி நடத்தினா்.

மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் படப்பை கு.விவேகானந்தன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். தமிழக இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் மதன்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனா்.

சாலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, வண்டலூா் வாலாஜாபாத் சாலை வழியாக சுமாா் இரண்டு கிமீ தொலைவில் உள்ள படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது.