காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.
போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து பேரணி நடத்தினா்.
மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் படப்பை கு.விவேகானந்தன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். தமிழக இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் மதன்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனா்.
சாலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, வண்டலூா் வாலாஜாபாத் சாலை வழியாக சுமாா் இரண்டு கிமீ தொலைவில் உள்ள படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
காவல் துறை தணிக்கையில் ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


