தில்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இதையும் படிக்க | இமாச்சலில் செப்.27 முதல் பள்ளிகள் திறப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றொரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.