ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆந்திரம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
ஆந்திரம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
Updated On :25 செப்டம்பர் 2021, 7:07 am

DIN


புது தில்லி : வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாக, வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசாவுக்கு இடையே அடுத்த 12 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த  தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வாக மாறி, வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் தீவிரமடையும் என்றும், இது செப்டம்பர் 26ஆம் தேதி மாலை கலிங்கப்பட்டிணத்துக்கு அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தள்ளது.

எனவே, இவ்விரு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.