மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்தில் வருமான வரித்துறை அதிரடி; முன்னணி வைர நிறுவனத்திற்கு சொந்தமான 23 இடங்களில் சோதனை

மகாராஷ்டிராவில் மும்பை, குஜராத்தில் சூரத், நவ்சாரி, மோர்பி, வான்கனர் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 செப்டம்பர் 2021, 9:29 am

DIN

குஜராத்தில் உள்ள முன்னணி வைர தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பில் ஈடிபட்டதை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் வைர நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை, குஜராத்தில் சூரத், நவ்சாரி, மோர்பி, வான்கனர் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "முதற்கட்ட விசாரணையில், சுமார், 518 கோடி மதிப்பிலான சிறிய அளவிலான மெருகூட்டப்பட்ட வைரங்களை கணக்கில் வராமல் வாங்கி விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், 95 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை விற்று அதன் மூலம் பணம் பெற்றுள்ளார். இது வருமானமாக கருதப்படுகிறது. இருப்பினும், இதற்கு கணக்கு காட்டப்படவில்லை என்பது தரவுகளின் மூலம் தெரியவருகிறது. வரி செலுத்த வேண்டிய நபர், 2,742 கோடி ரூபாய்க்கு சிறிய அளவிலான வைர கற்களை விற்றிருப்பது கணக்கு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், கணிசமான வைர விற்பனை பணம் மூலமாகவே நடைபெற்றுள்ளது. ஆனால், இப்பணம் பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்து பெறப்பட்டுள்ளது. சோதனை நடத்தப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான பல வங்கி கணக்குகள் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

சோதனைகளின் போது கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் என 1.95 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 10.98 கோடி மதிப்புள்ள 8,900 காரட் கணக்கிடப்படாத வைரம் கண்டுபிடிக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.