மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரபரப்பை ஏற்படுத்திய தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; இருவர் கைது

உமாங், வினய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு
Updated On :26 செப்டம்பர் 2021, 8:05 am

DIN

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிர் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு இருவரை கைது செய்துள்ளது. 

உமாங், வினய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வடமேற்கு தில்லி ஹைதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. துப்பாக்குச் சூடு நடைபெற்ற ரோஹிணி நீதிமன்றத்தின் நான்காவது வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு சாரர் கூறுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, வழக்கறிஞர் போல் உடை அணிந்து வந்த உமாங் உள்பட மூவர், நீதிமன்றததின் 9ஆவது செக்டரில் உள்ள அறைக்கு சென்றதாகவும் இவை அனைத்தும் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்குச்சூட்டு பிறகு, வெளியில் நின்று கொண்டிருந்த காரில் தப்பித்து செல்ல அவர்கள் திட்டமிட்டுருந்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இரவர் கொல்லப்பட்ட உமாங் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். 

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிரபல ரெளடி ஜிதேந்தா் மானை, வழக்கறிஞர் போல் மாறுவேடம் போட்டுவந்த விஷமிகள் மூன்று முறை சுட்டனர். ஜிதேந்தரின் பாதுகாப்புக்காக அங்கிருந்த சிறப்பு படை வீரர்கள் திரும்பி சுட்டதில், சம்பவ இடத்திலேயே தாக்குதலில் ஈடுபட்ட இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

இதுகுறித்து வெளியான விடியோவில், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு நடைபெறுவது போன்ற சத்தமும் வளாகத்திலிருந்து காவல்துறையினர், வழக்கறிஞர்கள் பதறி ஓடிவருவதும் பதிவாகியுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.