திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சாப்: அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு

பஞ்சாபில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செவ்வாய்க்கிழமை துறைகளை ஒதுக்கினார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 9:55 am

DIN


பஞ்சாபில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செவ்வாய்க்கிழமை துறைகளை ஒதுக்கினார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை கடந்த 18-ம் தேதி ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சரண்ஜீத் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வராகப் பதவியேற்ற பின், சரண்ஜீத் சிங் சன்னி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். அதில் புதிய முகங்கள் 7 பேர் உள்பட 15 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.  

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பொது நிர்வாகம், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு உள்பட 14 துறைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளார். துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவுக்கு உள்துறை, சிறைத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வர் ஓ.பி. சோனிக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் பிரம் மொஹிந்த்ராவுக்கு உள்ளாட்சித் துறை மற்றும் அவை விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளன. நிதித் துறை மூத்த அமைச்சர் மன்பிரீத் சிங் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய முகங்களில் ரண்தீப் சிங் நபாவுக்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமரீந்தர் சிங் ராஜாவுக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.