ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மீரட்டில் அதிகரிக்கும் டெங்கு; புதிதாக 33 பேர் பாதிப்பு

மீரட்டில் புதிதாக ஒரேநாளில்33 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தலைமை சுகாதார அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2021, 8:30 am

DIN

மீரட்டில் புதிதாக ஒரேநாளில்33 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தலைமை சுகாதார அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே இங்கு டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவது மாநில அரசுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மீரட் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் இதுகுறித்து, புதிதாக 33 பேர் உள்பட இதுவரை 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களிடையே டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.