இந்தியாவில் இதுவரை 88.96 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 58,80,843 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,96,14,483 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 36,02,83,201 இரண்டாம் தவணை - 8,29,14,910 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,94,88,042 இரண்டாம் தவணை - 7,67,86,029 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,13,31,706 இரண்டாம் தவணை - 5,61,87,315 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,732 இரண்டாம் தவணை - 88,93,916 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,52,652 இரண்டாம் தவணை - 1,50,03,980 |
மொத்தம் | 88,96,14,483 |