மகாராஷ்டிரத்தில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகரிப்பு மற்றும் பொது முடக்கம் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் மற்றும் இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளுக்கு புதிய விதமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, வார இறுதி நாள்களுக்கான பொது முடக்கம் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை தோறும் காலை 7 மணிக்கு நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர கட்டுப்பாடுகள் இரவு 8 மணிக்குத் தொடங்கி காலை 7 மணிக்கு நிறைவுபெறுகிறது.
ஏப்ரல் 15-ம் தேதி சூழல்கள் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தற்போது நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூரில் வாக்காளா்களுக்கு தேநீா் வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கவனத்தை ஈா்த்த ‘குப்பைக்கழிவுகள்’

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

‘மருத்துவம், கல்வி, தண்ணீா் இலவசம்’: சீமான்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


