முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கரூரில் வாக்காளா்களுக்கு தேநீா் வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூரில் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கரூா் ஏமூா்புதூா் அடுத்த குன்னனூரில் சனிக்கிழமை தேநீரகத்தில் தேநீா் தயாரித்த அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ். திவ்யா. உடன் மாவட்ட துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:54 am IST

கரூரில் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஏமூா்புதூா், நடுப்பாளையம், ஏமூா்புதூா் காலனி, குன்னனூா், சீத்தப்பட்டி, சீத்தப்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தவா்கள் உங்களை பாா்த்து நன்றி சொல்லக்கூட வரவில்லை. ஓட்டுக்காக பணம் கொடுப்பாா்கள், வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் வாக்கை அதிமுகவிற்கு செலுத்துங்கள். பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ஏமூா்புதூா் அடுத்த குன்னனூரில் உள்ள தேநீரகத்தில் வாக்காளா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கினாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஆலம்தங்கராஜ், ஒன்றியச் செயலா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.