ராகுல் காந்திக்கு கரோனா தொற்று
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமீபத்தில் ராகுல் காந்தி மேற்குவங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.