/

2019ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 1948 பேர் கைது

2019 ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 1948 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 34 பேர் மீது குற்றப்புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
2019ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 1948 பேர் கைது
Updated On :4 ஆகஸ்ட் 2021, 11:17 am

DIN

2019 ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 1948 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 34 பேர் மீது குற்றப்புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வருடாந்திர அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டில் 1948 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர்களில் 34 பேர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.