பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 13வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க |
இந்நிலையில், அடுத்த 5 நாள்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் காலை 10 மணிமுதல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.