நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பே இல்லையாம்

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மகாராஷ்டிராவின் பண்டாரா உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2021, 12:53 pm IST

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மகாராஷ்டிராவின் பண்டாரா உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மகாராஷ்டிராவின் பண்டாரா நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தகவல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், "முறைான திட்டமிடுதலுடன் கண்காணிப்பு, பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளின் விளைவாக 15 மாதங்களுக்கு பிறகு கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பண்டாரா அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 578 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் கடம் கூறுகையில், "அரசு மற்றும் மக்கள் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளால் கிழக்கு மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பண்டாரா கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகியுள்ளது.

தற்போது, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லையெனிலும், வரும் நாள்களில் மக்கள் கவனமாக இருந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.