நாட்டின் நலனுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: பிகார் முதல்வர்

நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)


நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து எந்தவித பதிலும் வரவில்லை.

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது எங்களின் நீண்ட கால கோரிக்கை. இந்த கணக்கெடுப்பு மூலம் சாதிவாரியாக துல்லியமான எண்ணிக்கை கிடைக்கும்.

இதன் மூலம் அவர்களுக்கான நலத்திட்டங்களை வகுக்க இயலும். நாட்டின் வளர்ச்சிக்கும் இது பலனளிக்கும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com