பெகாஸஸ் தயாரிக்கும் என்எஸ்ஓ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் கிடையாது: மத்திய அரசு
பெகாஸஸ் மென்பொருளைத் தயாரிக்கும் என்எஸ்ஓ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் கிடையாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தது.
பெகாஸஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க | எதிர்க்கட்சிகள் அமளி: 15வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரியும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசோ இதுகுறித்து விவாதிப்பதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால், மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கி வருகிறது.
இந்த நிலையில் பெகாஸஸ் மென்பொருளைத் தயாரிக்கும் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.