/

தில்லியில் கரோனா சிகிச்சையில் 498 பேர்: ஆண்டின் மிகக்குறைந்த எண்ணிக்கை இது!

தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 498 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மிகக்குறைந்த பாதிப்பாக இது உள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:52 am

DIN

தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 498 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் மிகக்குறைந்த அளவில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பதிவான நாள் இதுவாகும். 

தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தொற்று விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது. தற்போதுவரை 14,36,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 498 ஆக உள்ளது. 

கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 25,067 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,11,235 ஆக அதிகரித்துள்ளது. 

1,06,86,612 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 11,099 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது 

தில்லி சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.