நாட்டில் இதுவரை 52 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 52 கோடிக்கும் அதிகமானோருக்கு (52,32,53,450) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதையும் படிக்க | கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 40 லட்சத்திற்கும் அதிகமான (40,02,634) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவில் இதுவரை 20,58,952 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 4,30,665 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.
இதையும் படிக்க | தில்லியில் குறைந்தது கரோனா: புதிதாக 37 பேருக்கு பாதிப்பு
மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.
நாட்டில் இதுவரை மொத்தம் 40,66,36,665 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 11,66,16,785 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 1,05,40,186 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 8,22,624 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.