47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் குறைந்தது கரோனா: புதிதாக 37 பேருக்கு பாதிப்பு

தில்லியில் புதிதாக 37 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு.  புதிதாக எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

News image
தில்லியில் குறைந்தது கரோனா: புதிதாக 37 பேருக்கு பாதிப்பு
Updated On :11 ஆகஸ்ட் 2021, 2:47 pm

DIN

தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தில்லியில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,36,889-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14,11,327-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. எனினும் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,068-ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.